மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Friday, September 16, 2011

நம்பிக்கையுடன்....


வெட்டப்பட்ட மரத்தில



சிதைந்த கூட்டைப்பற்றி


கவிதை எழுதி


முடிப்பதற்குள்..



வீழ்ந்த மரத்தின்


குச்சிகளை கொண்டே




கட்டியது மற்றொரு கூட்டை..


காக்கை.



நம்பிக்கையுடன்.

Monday, August 1, 2011


நம் நட்பு
எந்தக் காதலிலும்
இல்லை....

Thursday, July 14, 2011

உயிரே உனக்காக ....


உண்மையிலேயே வாழ்க்கை என்பது ,
மிகவும் வித்தியாசமானதுதான்.
மாற்றம் வராதா என்று நாம் ஏங்கித் தவிக்கும் போது,
எவ்வித மாற்றமும் இல்லாமல் ,நாம் சலித்துக் கொள்ளும் அளவிற்கு ,
வாழ்க்கை வருடக்கணக்கில் அப்படியே தேங்கி நிற்கிறது .

அதே நேரத்தில் சில நிமிடங்களிலே நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு ,வாழ்க்கை அடியோடு தலைகீலாகவும் மாறிப் போகிறது ......

Saturday, July 9, 2011

அன்பின்றி அமையாது உலகு ...


சின்ன சின்ன ஆனந்தங்களால் அமைவது தான் வாழ்க்கை
சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொண்டாலே
வாழ்க்கையை இனிமையாக வாழமுடியும் ...

Thursday, June 30, 2011

வயசையும் மனசையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம் .
ஆதி நெருப்பின் கதகதப்பு ,உலகின் முதல் உன்மத்தம் !

ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு ... அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது !




Jessi:முதல் காதலை மறக்கவே முடியாது .கடைசி காதலை மறுக்கவே முடியாது !


June 30 at 8.04pm comment:Like






COMMENTS:

Prakash:ஹலோ ...அப்ப என்னை எல்லாம் இன்னா பண்ணுவ ?


Jute :அவ்ளோ வயசாகிடுச்சா உனக்கு ?


Bala :என் எல்லாக் காதலிகளும் ஜெசிக்கள் தான் !!!!

Biro :நண்பனுக்கு மேட்டர் தெரிஞ்சா, நெந்துடுவான் !


காயங்கள்....


உன்னை அதிகம் நேசிப்பவர்கள் தான்
உன்னை அதிகம் காயப் படுத்துவார்கள்
நீ
காயப்படும்
போது அதற்காக
அதிகம் துன்பப் படுபவர்களும்
அவர்கள் தான் . . .

மௌனம் சுமக்கும் பொழுதுகள் ....


மௌனம் சுமக்கும் பொழுதுகள் !!!!!!!!!

ப்ரியம்...


பெயர் கூடத் தெரியாமல் பேரன்பு சுமந்து பின்னாலேயே திரிந்த இதயங்கள் எத்தனை எத்தனை ?'ஒரு வாரம் உன்னிடம் ,ஒரு மாதம்
என்னிடம் 'என கோர்ட்டில் குழந்தையின் அன்பைப் பிரித்துக்கொண்டவர்கள் நம் தெருவிலும் வசிக்கிறார்கள் .எதிரெதிர் கேபினில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து அவர்கள் சிரித்தார்கள் .ஈழத்தில் அவனும் ,கனடாவில் அவளுமாக ,கொடுந்துயர் சுமந்து காத்திருகின்றனர் இருவர் .
இதற்கு எல்லாம் என்ன பெயர் ?


தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு ,கிடைக்கிற மௌனம் எவ்வளவு அழகானது .மௌனத்திலும் தேடினால் ,ஆழத்தில் ஒவ்வொருவருக்குளும் பிய்த்தெரிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிடக்கிறது ப்ரியம்.ஆமாம் ....இதை எல்லாம் ப்ரியம் என்றே அழைத்தால் என்ன?


ஆகவே ,பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும் !

Tuesday, March 15, 2011

மனதின் பேராசை


இல்லை என்று தெரிந்தும் துடிகின்றது மனம் !வேண்டும் என்று ...

கனவு


Dream what you want to dream, go where you want to go, be what you want to be.
Because you have only one life and one chance to do it all.